கோட்டாவின் தீர்மானம் – அநுர அரசாங்கத்துக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0
23
Article Top Ad

2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த தடுப்பு உத்தரவு சட்டத்தை மீறுவதாக இருந்ததாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக அவருக்கு 100,000 ரூபாய் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு பேலியாகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவால் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை பிறப்பித்துள்ளது.

மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதை கருத்திற் கொண்டே ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும் உத்தரவை பிறவித்துள்ளது.