கொழும்பு மாநகரசபை உட்பட பல உள்ளூராட்சிமன்றங்களின் தேர்தல் தள்ளிப்போகிறது

0
2
Article Top Ad

கொழும்பு மாநகரசபை உட்பட பல உள்ளூராட்சிமன்றங்களின் தேர்தல் ஒத்திவைக்கும் சூழ்நிலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த 20ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

நிராகரிக்கப்பட்டிருந்த வேட்புமனுக்களில் பிரதான அரசியல் கட்சிகளின் சில வேட்புமனுக்களும் இருந்தன. இந்தக் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமள்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விசாரணைகளின் பிரகாரம் கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிக்கு முன்னதாக தாக்கல் செய்யுமாறும் ஆட்சேபனைகள் தொடர்பில் எதிர்ப்புகள் இருப்பின் மே 7ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் குழாம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.

குறித்த எழுத்தாணை மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் மே​ மாதம் 16ஆம் திகதி நடத்துவதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here