உலக வங்கி குழுமத் தலைவருடனான சந்திப்பு – இலங்கைக்கு உதவித்திட்டம்

0
141
Article Top Ad

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலக வங்கி குழுமத்தின் தலைவர் அஜய் பிங்கா மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பினைத் தொடர்ந்து, இலங்கைக்கு உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தசாப்த காலத்தின் பின்னர், உலக வங்கியின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அதைக் குறிக்கும் வகையிலும், நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்காலத்திற்கான புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டைக் குறிக்கும் விதமாக உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இலங்கையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தனியார் துறை வளர்ச்சிக்காக, மூன்று ஆண்டுகளுக்கான 1 பில்லியன் டொலர் உதவித்திட்டத்தை வழங்குவதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டிற்கான அதிக திறன் கொண்ட துறைகளான எரிசக்தி, விவசாயம், சுற்றுலா மற்றும் பிராந்திய மேம்பாட்டை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. பொருளாதார வாய்ப்பை விரிவுபடுத்துதல், உள்ளூர் தொழில்துறையை வலுப்படுத்துதல் மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு உதவ தனியார் மூலதனத்தை ஈர்ப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.