Article Top Ad
அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கு, 12 நாடுகளுக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், கொங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே அமெரிக்காவிற்கு பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புருண்டி, கியூபா, லாவோஸ், சியேரா லியோனி, டோகோ, துருக்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய 7 நாடுகளுக்கும், அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டவர்களின் அச்சுறுத்தல்களில் இருந்து தமது நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறுகின்றது.