பொதுமன்னிப்பு குளறுபடி – அடுத்தடுத்து முக்கியஸ்தர்கள் கைது

0
3
Article Top Ad

ஊழல் மற்றும் மோசடி குற்றங்களில் தொடர்புடைய கைதி ஒருவரை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அடுத்தடுத்து முக்கிய அதிகாரிகள் கைதாகி வருகின்றனர்.

நேற்றிரவு கைதான அநுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, இன்று (9) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதே குற்றச்சாட்டில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை இன்று (09) தீர்மானித்தது. அதுமட்டுமன்றி, மேற்குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை நாளை தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here