அகமதாபாத்தில் விமான விபத்து – இதுவரை 40 பேர் பலி

0
7
Article Top Ad

அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானிய பிரஜைகள், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனடிய பயணி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள மேகனிநகர் பகுதிக்கு அருகிலுள்ள தார்பூரில் இருந்து கடுமையான புகை வெளியேறி வருகிறது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர், மேலும் அவசரகால மீட்புக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here