பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை முன்னெடுங்கள் – இலங்கை கோரிக்கை

0
8
Article Top Ad

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான பதற்ற நிலையை தணிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுமாறு இலங்கை கோரக்கை விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சு இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதை பதற்ற நிலையால், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளதாகவும், இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், உரையாடலில் ஈடுபடுமாறும், பதற்ற நிலையை தணிப்பதற்கான முயற்சிகளைத் தொடருமாறும் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

இரு நாடுகளிலும் உள்ள இலங்கைத் தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், அனைவரையும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கோரியுள்ளது.

ஈரானின் ஈரானின் அணுசக்தி தளங்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் விஞ்ஞானிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஹமாஸ் உடன் போர் நடத்தி வரும் இஸ்ரேல், ஈரான் மீது தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளமை மத்திய கிழக்கில் பதற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு  ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here