இஸ்ரேலின் போரில் அமெரிக்கா நேரடி தலையீடு செய்தால், பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஈரான் உயர்மட்ட தலைவர் அலி காமெனெய் எச்சரித்தார். அத்தோடு, ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“ஈரான், அதன் மக்கள் மற்றும் அதன் வரலாற்றை அறிந்தவர்கள், இந்த நாட்டிடம் ஒருபோதும் அச்சுறுத்தல் மொழியில் பேச மாட்டார்கள், ஏனெனில் ஈரானிய நாடு சரணடையாது” என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அலி காமெனெய் கூறியுள்ளார்.
“அமெரிக்காவின் எந்தவொரு இராணுவத் தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி சரிசெய்ய முடியாத சேதத்திற்கு வழிவகுக்கும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்திருக்க வேண்டும்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.
இஸரேல்-ஈரானுக்கு இடையிலான தாக்குதல்கள் ஒருவார காலமாக தொடர்கின்ற நிலையில், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது என்றும், தெஹ்ரானை விட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்த நிலையில், ஈரான் தலைவர் அதற்கு பதில் வழங்கியுள்ளார்.