இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாது ; விளையாட்டுத்துறை அமைச்சரின் அறிவிப்பு!

0
136
Article Top Ad

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பல புதிய விதிமுறைகளை வெளியிட்டார்.

அதன்படி, இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாத வகையில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டுக் கழகங்களின் எந்தவொரு அதிகாரி அல்லது குழு உறுப்பினரின் அதிகபட்ச வயதை 70 ஆக மாற்றவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.