‘சமஷ்டி’ கேட்டால் மீண்டும் இரத்த ஆறு ஓடும்! – கம்மன்பில எச்சரிக்கை

0
143
Article Top Ad


“சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என்று கூறிவைக்க விரும்புகின்றோம்.”

– இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கிடைக்க மாட்டாத ஒன்றைத் திருப்பித் திருப்பிக் கேட்டால் கிடைக்கும் என்று சம்பந்தன் அணியினர் எண்ணுகின்றனர்.

கிடைக்க மாட்டாத சமஷ்டியைக் அவர்கள் கேட்பதால் – அதில் விடாப்பிடியாக இருப்பதால் இன முரண்பாடு மேலும் உச்சமடையும். மீண்டும் இரத்தக்களரிதான் ஓடும்.

நாட்டில் இன முரண்பாடு உக்கிரமடைய நாம் விரும்பவில்லை. ஆனால், அந்த மோசமான நிலைமையைத் தமிழ்த் தலைவர்கள் விரும்புகின்றனர். அதை வைத்து நீண்ட காலத்துக்கு அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்று  அவர்கள் தப்புக்கணக்குப் போடுகின்றனர்.” – என்றார்.