ஜனாதிபதி தேர்தல் இல்லை – ரணில்

0
172
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த பணிகள் முடியும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் சபை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடனான தனித்தனி சந்திப்புகளில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் இருக்கும் என்பதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி தெரிவித்தார்.