ஜனாதிபதி போட்டியில் இருந்து ரணில் விலகிக்கொள்ள வேண்டும்

0
13
Article Top Ad

ஜனாதிபதியின் ஆலாேசகர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது சட்ட விராேதமாகும். அது தொடர்பில் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். சரியாக இருந்தால் அவர் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என தேசிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக முன்னணி நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 27பேர் கட்டுப்பணம் செலுத்தி இருக்கின்றனர். இது ஜனநாயக உரிமையை துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும். கட்டுப்பணம் செலுத்தியுள்ள அதிகமான வேட்பாளர்களுக்கு 500வாக்குகள் கூட பெற முடியாது. வேட்பாளர்கள் அதிகரிக்கும்போது வாக்குச்சீட்டும் நீலமாகிறது. இதனால் வாக்களிக்கும்போது சாதாரண மக்கள் குழப்படையும் நிலை உருவாகிறது.

அத்துடன் ஒரு வேட்பாளரின் பெயரை வாக்குச்சீட்டில் உள்வாங்க 25மில்லியன் ரூபா செலவாகிறது. இதுவரை 27வேட்பாளர்கள் இருக்கின்றனர். அப்படியானால் எந்தளவு தொகை செலவாகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். மக்களின் பணமே இதனால் விரயமாகிறது.

அதேநேரம் ஜனாதிபதியின் ஆலாேசகர் ஒருவரும் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனாதிபதியின் ஆலாேசர் ஒருவர் வேட்பாளராக வருவதாக இருந்தால் அது ஜனாதிபதியை ஊக்குவிப்பதற்கே போட்டியிடுகிறார் என்பது எவருக்கும் புரிந்துகொள்ளலாம். இந்த செயல் சட்டவிராேதமானதாகும். இது தொடர்பில் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். ஜனாதிபதி இந்தளவு கீழ் மட்டத்துக்கு செல்வதாக இருந்தால் அவர் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

இதேவேளை, நானே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உத்தியோகபூர்வமான தலைவர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பாகவே நான் போட்டியிடுகிறேன். இடைக்கால தடை உத்தரவு இருப்பதால் அதனை பயன்படுத்துவதில்லை.

கூட்டணி அமைத்து பாேட்டியிடும்போது கட்சியை யாரும் ஊக்குவிப்பதில்லை. போட்டியிடும் கட்சியையும் சின்னத்தையுமே ஊக்குவிக்கின்றனர். சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ அனைவரும் அவ்வாறே செயற்பட்டனர். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் என்னுடனே இருக்கின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்துக்கு நான் பலாத்காரமாக வரவில்லை. இரண்டு முறை கட்சியின் நிறைவேற்றுக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டேன். தலைமைப்பதவிக்கு நிமல் சிறிபால, தயாசிறி யாரும் போட்டியிடவில்லை. கட்சியின் நிறைவேற்று சபையின் 240பேரில் 220பேர் என்னுடன் இருக்கிறார்கள் என்றார்.