இலங்கை, இராணுவத் தளங்களுக்கான போர்க்களம் அல்ல: வணிக கூட்டாண்மை மட்டுமே – அலி சப்ரி

0
14
Article Top Ad

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை நெருங்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சி மற்றும் மீட்சி ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஒரு பிரிக்கப்பட்ட ஆணை ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டியாக மூன்று வல்லமை மிக்க வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அரசியல் பன்முகத்தன்மை இருந்தபோதிலும், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உட்பட அனைத்து முக்கிய கட்சிகளும் ஐஎம்எப் திட்டத்தை தொடர்வது குறித்த இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அலி சப்ரி கூறுகிறார்.

இத் தொடர்ச்சியானது இலங்கையின் பொருளாதார திசையில் நம்பிக்கையுடன் இருக்கக்கூடிய வெளி கடனாளிகளுக்கு ஸ்திரத்தன்மை உணர்வை வழங்குகிறது.

சீர்திருத்த வேகம் மற்றும் பொருளாதார மீட்சியை பராமரிப்பதில் முக்கிய காரணியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் தற்போதைய ஜனாதிபதியின் நிரூபிக்கப்பட்ட சாதனையை அலி சப்ரி எடுத்துரைத்தார்.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் மூலோபாய நிலை மற்றும் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் போட்டியிடும் நலன்கள் பற்றிய கவலைகளை வெளிப்படுத்திய அவர் , இலங்கை இராணுவத் தளங்களுக்கான போர்க்களம் அல்ல என்று உறுதியாகக் கூறினார்.

நாட்டின் கூட்டாண்மை முதன்மையாக வணிகரீதியானது, இராணுவப் பயிற்சிகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் நிரந்தர இராணுவ இருப்பு அனுமதிக்கப்படவில்லை.

இலங்கை தனது இறையாண்மையைப் பேணுவதுடன் வர்த்தகத்திற்காக திறந்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது, என்றார்.

சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான இந்தியாவின் கவலைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​இராணுவக் கப்பல்களைக் கையாளும் இலங்கையின் வெளிப்படையான பொறிமுறையை அலி சப்ரி விளக்கினார்.

அனைத்து நாடுகளுக்குமான பொதுப் பாதைக்குரிய சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கப்பல்களை இலங்கை வரவேற்கிறது எனறும் அலி சப்ரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.