“லைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள வேட்டையன்“: உலகம் முழுவதும் நாளை வெளியாகின்றது

0
13
Article Top Ad

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்‌ஷன்ஸ், அதன் அடுத்த பிரம்மாண்டமான படைப்பான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுதும் வெளியாகவுள்ளது.

மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் வேட்டையன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

32 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்துள்ளனர்.

இரண்டு மெகாஸ்டார்களும் இணைந்துள்ளமையால் படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பாராட்டுப் பெற்ற இயக்குநர் டி.ஜே.ஞானவேல் வேட்டையன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ரஜினியின் ஜெயிலர் பட மெகா வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் வேட்டையன் படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் வெளியாகியிருந்த வேட்டையன் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுடன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் நாளை இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

வேட்டையன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என்பதுடன் மாபெரும் வெற்றிப் படங்களை வழங்குவதில் லைக்கா நிறுவனத்தின் நற்பெயரையும் உறுதிப்படுத்துகிறது.

மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் பிரம்மாண்டத்தை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here