கொலைச் சந்தேகநபர்களுக்கு PTA ஐப் பயன்படுத்துவதில் பொலிஸ்மா அதிபருக்கு ‘பிரச்சினை இல்லை’

0
3
Article Top Ad

பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் அறிவித்துள்ள கொள்கைக்கும், அதனை பொலிஸார் பயன்படுத்துவதற்கும் இடையில் முரண்பாடு உள்ளதா என்ற கவலை எழுந்துள்ளது.

கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதில் சிக்கல் இல்லை என பதில் பொலிஸ் மா அதிபர் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், அரசாங்கம் அந்த சட்டத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு அறிவித்துள்ளது.

“ஏற்கனவே உள்ள சட்டத்தின் மூலம் செயல்படுத்துவது ஒரு விசாரணையேத் தவிர, நாங்கள் அதை நிராகரிக்கவில்லை. தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளமு. அந்தச் சட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை. எனவே, ஏற்கனவே உள்ள சட்டத்தின் மூலம் குற்றவியல் விசாரணை நடத்துவதில் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சிக்கல் இருப்பதாக நான் நினைக்கிறேன். அது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் தற்போதுள்ள சட்டத்தில் சிக்கல் இருப்பதாக நான் நினைக்கவில்லை.”

கனேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரத்னவின் கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்திருப்பது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் எனக் குறிப்பிட்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பதில் பொலிஸ் மா அதிபரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த வீரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அது ஒரு பிரச்சினையாக மாறவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக உறுதியளித்து சட்டத்தில் திருத்தம் செய்து தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தின் இறுதி வரைபை ‘மேலும் ஆய்வு செய்து மேம்படுத்துவதற்கு’ ஜனாதிபதியின் சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதாக பெப்ரவரி 19ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க 2025 ஜனவரி 21ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

“அதேபோல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது என்னவென்றால், அது எங்கள் இலட்சியமோ கொள்கையோ அல்ல, ஆனால் புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை நாட்டின் சட்டங்களை நாங்கள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் சட்ட மூலத்தை நிறைவேற்றும் வரை நாங்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும்.”

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here