“டிரம்ப்பின் வரிக் கொள்கை” – தொடர்ந்து வீழ்ச்சியடையும் கொழும்பு பங்குச் சந்தை

0
10
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளதுடன், அது இலங்கையிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமையபெற்றது முதல் கொழும்பு பங்குச் சந்தை சற்று ஏற்றத்தை சந்தித்து வந்தது. முதல் முறையாக கடந்த மாதத்தில் 17ஆயிரம் புரள்வையும் பங்குச் சந்தை தொட்டிருந்தது.

இந்த நிலையில், கொழும்பு பங்கு சந்தையும் டிரம்பின் வரிக் கொள்கைக்கு இழக்காகியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும். இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here