அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.
இதன்படி ஜப்பானின் Nikkei 225 பங்குச் சந்தை குறியீடு 2% உயர்ந்ததாகவும், தென் கொரியாவின் KOSPI பங்குச் சந்தை குறியீடு 1.1% உயர்ந்ததாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அவுஸ்திரேலியாவின் ASX 200 பங்குச் சந்தை குறியீடு 0.7% உயர்ந்தது.
அமெரிக்க ஜனாதிபதியின் வரிக் கொள்கை காரணமாக உலக பங்குச் சந்தைகள் திடீரென வீழ்ச்சிக்கண்டிருந்தன.
இலங்கையின் பங்குச் சந்தையும் 15ஆயிரம் புள்ளியில் இருந்து 13ஆயிரம் புள்ளிவரை குறைந்திருந்தது.
இந்த நிலையில் குறித்த வரிக் கொள்கையை 3 மாதகாலங்களுக்கு தள்ளிவைப்பதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக உலக பங்குச் சந்தைகள் தற்போது மெல்ல மெல்ல ஏற்றகண்டு வருகின்றன.