பொலிஸ் காவலில் இடம்பெறும் மரணங்களை தடுக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு

0
7
Article Top Ad

பொலிஸ் காவலில் இருக்கும் போது கைதிகள் மரணிப்பதை தடுப்பது தொடர்பான பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு முதலாம் இலக்கத்தின் கீழ் இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை முழுமையாக அமுல்படுத்துவதற்கு பொலிஸார் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் எல்.டி.பி. தெஹிதெனிய தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில், பொலிஸ் காவலில் ஏற்பட்ட 49 மரணங்களும், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 30 மரணங்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here