நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? – ஜனாதிபதி விளக்கம்

0
15
Article Top Ad

அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் பொருளாதார முடிவெடுப்பதே நாட்டின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும். இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியாததால், வெளிப்புற தரப்பினரிற்கு கீழ்ப்படிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது பொருளாதார கொள்கைகளின் அடிப்படையிலேயே பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய வரி வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதியின் செலவினங்களைக் கூட இன்றளவு குறைத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதை தடுப்பதற்கான முதல் முன்மாதிரி இது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு வினைத்திறனான பொது சேவைகளை வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அரச இயந்திரத்திற்குள் காணப்படும் கருப்பு பொறிமுறையை உடைத்து அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படியும் வகையில் ஒரு செயல்முறை உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வரிசெலுத்துகையை பொறுத்தவரை, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 43% மாத்திரமே அறிக்கைகளை வழங்கியுள்ளன. அதேபோன்று, 2023-2024 ஆண்டுகளில் தனிநபர் வருமான வரிகளில் 23% மாத்திரமே அறிக்கைகளை வழங்கியுள்ளனர். கூட்டு வர்த்தக அறிக்கைகளை 46% வழங்கியுள்ளனர். அதேபோன்று PAYE Tax செலுத்துபவர்களில் 18% அறிக்கைகளை வழங்கியுள்ளனர். இந்த தரவுகள் எதுவும் 50% ஐ தாண்டவில்லை. இது வரி செலுத்துவதில் தயக்கத்தையும் வரிகளைத் தவிர்க்கும் முயற்சியையும் எடுத்துக் காட்டுகிறது. இதற்குக் காரணம், கடந்த காலத்தில் ஆட்சியாளர்களால் நமது நாட்டின் வரிப் பணத்தைப் பயன்படுத்திய விதம் குறித்து, வரி செலுத்துவோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்த விமர்சனமே ஆகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆகவே, பொதுமக்களின் வரிப் பணம் அத்தியாவசியத் தேவைகளுக்கு முறையாகச் செலவிடப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்குவதாகவும், வரி செலுத்தும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here