அமெரிக்க தாக்குதல்கள் நீண்டகால பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் – ஈரான்

0
8
Article Top Ad

ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்கியதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க தாக்குதல்கள் நீண்ட கால பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi)  எச்சரித்துள்ளார். இது ஐ.நா., சர்வதேச சட்டம் மற்றும் அணு ஆயுத ஒப்பந்தத்தை (NPT) மீறிய செயலாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது மக்களையும், தன்னாட்சி அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கான அனைத்து தெரிவுகளையும் கொண்டுள்ளது  என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தாக்குதலை “முழுமையான அழிப்பு” என விவரித்துள்ள போதும், ஈரான் அதனை மேல்மட்டமாக நடத்தப்பட்ட தாக்குதல் என கூறி’யுள்ளது. ஃபோர்டோ அணு நிலையத்திற்கு தீவிர சேதம் ஏற்படவில்லை என்றும், மேல்மட்ட கட்டடங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன என்றும் ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் மனான் ரயிசி கூறியுள்ளார். “ஃபோர்டோ மையம் தொடர்ந்து செயற்படக்கூடிய நிலையில் உள்ளது; பாரிய அணு ஊடுச்செலுத்தல் உள்நோக்குகள் பாதிக்கப்படவில்லை. கூடுதலாக, இதுவரை கதிரியக்கம் கண்டறியப்படவில்லை,” என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு, இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை நோக்கி ஈரானின் ஏவுகணைகள் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இ’தேவேளை, NASA-வின் FIRMS (Fire Information for Resource Management System) தரவுகளின்படி, ஃபோர்டோ அணு மையத்திற்கு இரு வெப்பக் கதிர்கள் (heat signatures) பதிவாகியுள்ளன. எனினும், தாக்குதல் குறித்து அமெரிக்கா ஜனாதிபதி தமது சமூக வலைத்தளத்தில் அறிவிக்க முன்னர் இது பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here