6 நாட்களில் 1000 அதிகமானோர் கொரோனாவிற்கு பலி; மொத்த எண்ணிக்கை 7000ஐத் தாண்டியது

0
188
Article Top Ad
Photo credit : Ishara Kodikara -AFP

கொரோனாவின் அபாயகரத்தெரிவான டெல்டாவின் அதி தீவிரப்பரவல் காரணமாக இலங்கையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவருகின்றது . இன்றுடன் சேர்த்து கடந்த 6 நாட்களில் மாத்திரம் 1000ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 198 மரணங்கள் நேற்று (20) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 6,985 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 198 மரணங்களுடன் இலங்கையில் இதுவரை 7,183 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 198 பேரில் 117 பேர் ஆண்கள் 81 பேர் பெண்கள் என்பதுடன் 60 வயதுக்கு மேற்பட்டோர் 154 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.