இந்திய முப்படைகளின் தளபதியைப் பலிகொண்ட ஹெலிகொப்டர் விபத்தில் விடை தெரியாத வினாக்கள்!

0
233
Article Top Ad

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற நவீன எம்.ஐ. 17 வி5 ஹெலிகொப்டர் விபத்து தொடர்பாக பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன. தொடர்ந்து நடைபெறும் விசாரணையில்தான் அவை தீர்க்கப்படும் எனத் தெரிகிறது.

தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற எம்.ஐ.17 வி5 ஹெலிகொப்டர்ர் நேற்றுமுன்தினம் நண்பகல் குன்னூர் காட்டேரி அருகே தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் விபத்திற்குள்ளானது.

அதில் 13 பேர் இறந்தனர். வெலிங்க்டன் இராணுவ கல்லூரி பணியாளர் ஒருவர் மட்டும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியதா அல்லது மேகமூட்டம் காரணமாக மரத்தில் மோதி தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் குறித்து விமானப் படை முன்னாள் அதிகாரிகள் சிலர் கூறுகையில் நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பயணிக்கிறார் என்பதால் ஹெலி​ஹெலிகொப்டர் விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும்.

மற்றொரு ஹெலிகொப்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். வானிலை நிலைமை சரிபார்க்கப்பட்ட பின்னரே ஹெலி​ெகாப்டரை எடுத்திருப்பார்கள். மோசமான வானிலை இருந்திருந்தால் பயணத்தை ரத்து செய்ய முயற்சித்திருக்கலாம்.

அப்படி இவை எல்லாமே சாதாரணமாக இருந்திருந்தால்இ ஹெலிகொப்டர் குன்னூருக்கு அருகில் மேகங்களுக்கிடையே தாழ்வாக பறந்த போது மலை மீது உள்ள உயரமான மரங்களில் மோதியிருக்கலாம்.

அந்த வான் வழியில் பழக்கப்பட்ட விமானிதான் ஹெலி​ெகாப்டரை இயக்கினாரா என்பது தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

எம்.ஐ.17 வி5 வகை ஹெலிகொப்டர் நவீன ரக இராணுவ ஹெலிகொப்டர் ஆகும். உலகின் மேம்பட்ட ஹெலி​ெகாப்டர்களில் இதுவும் ஒன்று. தற்போது விபத்துக்குள்ளானது ZP5164 சீரியல் எண் கொண்டது.

பிரதமர் மோடி இதே ரகத்தில் ZP5238 சீரியல் எண் ஹெலி​ெகாப்டர்களை பல்வேறு சந்தர்பங்களில் பயன்படுத்தியுள்ளார். கடந்த 2020 ஓகஸ்ட் மாதம் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழாவுக்கு இந்த ரக ஹெலி​ெகாப்டரில்தான் அயோத்திக்கு வருகை தந்தார்.

அதே போல் இவ்வாண்டு ஏப்ரலில் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தின் போது கங்காராம்பூர்இ ஜெய்நகர் கூட்டங்களுக்கு இதே ரக ஹெலி​ெகாப்டரில் பயணித்துள்ளார்.