இலங்கைக்கு பிரித்தானியா உதவும் ; பொரிஸ் ஜொன்ஷன் ரணிலிடம் உறுதி!

0
273
Article Top Ad

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஷனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (30) பிற்பகல் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பிரித்தானியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரித்தானிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.