அரச ஊழியர்கள் தனியார் துறையிலும் பணியாற்றலாம்!

0
131
Article Top Ad

அரச ஊழியர்களுக்கு தனியார் துறையிலும் பணியாற்றக் கூடிய வகையில் அனுமதிகளை வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்காக அரச ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இது குறித்து ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழுவை நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டதும், அதனை அமைச்சரவையில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.