எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம்!

0
114
Article Top Ad

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலையை அதிகரிக்க பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 92 மற்றும் 95 வகை பெட்ரோலின் விலை 70 முதல் 80 ரூபாவினாலும், டீசல் மற்றும் சுப்பர் டீசலின் விலை லீற்றர் ஒன்றின் விலை 50 முதல் 70 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மண்ணெண்ணெய் விலையை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.