பிரதமர் ரணில் பதவி விலக தயார்!

0
150
Article Top Ad

பிரதமர் பதவியில் இருந்து விலகி, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை பொறுப்பேற்பதற்கான வழிவகைகளை செய்யத் தான் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்பட உள்ளமையினாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தர உள்ளமையினாலும் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், தனது பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.