ரணில், டலஸ், அனுரவின் வேட்புமனுகள் ஏற்பு!

0
109
Article Top Ad

பாராளுமன்ற உறுப்பினர்களான ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுர குமார திஸாநாயக்காவின் வேட்புமனுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் அறிவித்தார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுத்தாக்கல் சற்றுமுன் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியில் இருந்து பின்வாங்கினார். டலஸ் அழகப்பெருமவின் பெயரை அவரே முன்மொழிந்தார்.

இதேவேளை ரணில் விக்ரமசிங்கவின் பெயரை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார். அனுர குமார திஸாநாயக்காவின் பெயரை விஜித ஹேரத் முன்மொழிந்தார்.

மூன்று வேட்புமனுக்களையும் ஏற்றுக்கொண்டதாக பாராளுமன்ற செயலாளர் அறிவித்தார்.