8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு!

0
112
Article Top Ad

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நாட்டின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பில் 134 வாக்குகளைப் பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றுள்ளார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும 82 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 3 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
இன்று மாலை ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

இதேவேளை, நாட்டு மக்களுக்கு விசேட உரையையும் நிகழ்;த்தவுள்ளார்.