அரச துறை ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து

0
120
Article Top Ad

வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்கள் இயங்காது என முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தை வழமை படுத்துவதை கருத்தில் கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பணிக்கு சமூகமளிப்பதில் அரச துறை ஊழியர்கள் எதிர்நோக்கிய சிரமங்கள் காரணமாக இந்த சுற்றறிக்கை முதலில் வெளியிடப்பட்டது.

அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பணிகளில் ஈடுபடுவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று அமைச்சரவை மாநாட்டில் தெரிவித்தார்.

இலங்கையில் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருளுக்கான QR அமைப்பில் வெற்றிகரமான உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.