பாராளுமன்றத்தை கலைத்து புதிய ஆணைக்கு இடமளிக்குமாறு கோரி ஜேவிபி ஆர்ப்பாட்டம்

0
217
Article Top Ad

பாராளுமன்றத்தை கலைத்து புதிய ஆணைக்கு இடமளிக்குமாறு கோரி தேசிய மக்கள் சக்தி இன்று பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதியில் இருந்து ஆரம்பமான பேரணி நுகேகொடையை சென்றடைந்தது. பின்னர் நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்தை கலைத்து புதிய ஆணைக்கு இடமளிக்குமாறு இதன்போது தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.