அக்டோபர் 01ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தில் 2.5% சமூகப் பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி எவ்வாறு மின்சார கட்டணத்தை பாதிக்கிறது என்பதை விளக்குவதற்காக வெளியிடப்பட்ட தெளிவுபடுத்தலில் PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச்சட்டத்தின்படி, இலங்கை மின்சார சபையின் (CEB) மின்சாரம் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு உட்பட்டது.
இதன்மூலம், மின்சார சபையிடமிருந்து மின்சாரம் பெறும் நுகர்வோர் உள்ளிட்ட தரப்பினரால் மின்சாரம் கொள்வனவு செய்யும் போது 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் இந்த வரி அறவிடப்படும்.
மேலும் விளக்கமளித்த PUCSL தலைவர், “”சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மின்சாரத்துறையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து மின் நுகர்வோர் உட்பட மின்சாரத்துறையில் உள்ள பல்வேறு தரப்பினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மின் கட்டணங்கள் சமீபத்தில் திருத்தப்பட்டதால், இந்த வரியில் இருந்து மின் நுகர்வுக்கு விலக்கு அளிக்க நிதி அமைச்சுக்குபரிந்துரை செய்தோம். குறித்த சட்டத்தின் பிரகாரம் இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகம் இந்த வரிக்கு உட்பட்டது என நிதியமைச்சு எமக்கு அறிவித்துள்ளது. அதன்படி 2022 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இலங்கை மின்சார சபையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் சகல தரப்பினரிடமிருந்தும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு வரி விதிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.