அபாய கட்டத்தில் இலங்கை! அடுத்த மூன்று வாரம் குறித்து பொதுமக்களுக்கு அபாயச் சங்கு

0
235
Article Top Ad

அடுத்துவரும் 3 வாரங்களுக்கு  Covid-19 மூன்றாம் அலை பரவல் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தொற்று பரவுதலை தவிர்ப்பதற்கு முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய அவசியம் பற்றியும்
இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு எனச் சட்ட விதிமுறைகள் இன்றி மக்களின் ஒத்துழைப்புடன் தற்போதுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தவே எதிர்பார்க்கின்றோம்.’

– இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொரோனாப் பரவல் தொடர்பான இன்றைய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் குறிப்பிடுகையில்,

‘நாடு தற்போது அபாய நிலையிலுள்ளது. எனவே அதற்கு முகங்கொடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்கான சகல வேலைத்திட்டங்களும் அரசு, சுகாதார அமைச்சு ஏனைய சுகாதார தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் எத்தகைய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும்.

ஜேர்மன்இ பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில்கூட தற்போது கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.

எமது அயல் நாடாள இந்தியாவிலும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காணப்பட்டதைவிட தற்போது உருமாறிய வைரஸ் பரவலே இதற்கான காரணமாகும். இது எமக்கு ஏற்பட்டுள்ள சவாலாகும்.

எனவே, இந்தச் சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு ஒவ்வொரு பிரஜைகளும் தமது கடமையைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்.

இம்முறை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அல்லது போக்குவரத்து கட்டுப்பாடு என்பவற்றை விதித்து சட்டத்தின் மூலமாக அன்றி, முழுமையாக மக்களின் ஒத்துழைப்புடன் நிலைமையைக் கட்டுப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும்’ – என்றார்.