சிறுவர்களை அதிகம் தாக்கும் கொரோனா! – 15 பேர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சேர்ப்பு

0
186
Article Top Ad

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 15 சிறுவர்கள் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, புதிய கொரோனா அலை மூலம் சிறுவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, ஐ.டி.எச். வைத்தியசாலையில் கடுமையான இட நெரிசலில் உள்ளன என்றும், எனினும் நிலைமை சிறப்பாக நிர்வகிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
…………..