எதிர்வுகூறல்களை மெய்ப்பிக்கும் வகையில் இலங்கையில் அதிகரிக்கும் மரணங்கள் – இன்று மட்டும் 31

0
274
Article Top Ad

இலங்கையில் இன்றுமட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 31 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவே இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்று உயிரிழப்பாகும்.

இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் மட்டும் 159 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் ஜுன் மாதமளவில் தினந்தோறும் 100 இறப்புக்கள் அளவில் பதிவாகும் என அமெரிக்காவின் ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைக்கழகத்தின் எதிர்வுகூறல் எச்சரித்திருந்த நிலையில் அது மெல்ல மெல்ல நிஜமாகிவருகின்றதா என்ற ஐயத்தை இலங்கையில் அதிகரிக்கும் இறப்புக்கள் எழுப்பியுள்ளன .

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த உயிரிழப்பு 923 ஆக அதிகரித்துள்ளது.