‘போர்ட் சிட்டி’ சட்டமூலத்தை நாம் இலகுவாக நிறைவேற்றுவோம்! – அரசு நம்பிக்கை

0
214
Article Top Ad

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதில் அரசுக்கு எந்தவொரு ஆட்சேபனைகளும் இல்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள அனைத்து தீர்மானங்கள் மற்றும் திருத்தங்களைச் செயற்படுத்த அரசு இணங்குகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் இலகுவாக நிறைவேற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.