2021 விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் காலிறுதிக்கு தகுதி

0
202
Article Top Ad

2021ம் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்களான ரொஜர்  பெடரர்,  நொவாக்  ஜோகோவிச் ஆகியோர் தகுதிப்பெற்றுள்ளனர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சம்பியனும், உலகின் முதன்நிலை வீரருமான  நொவாக் ஜோகோவிச் – கிறிஸ்டியன் காரினை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியன் காரினை தோற்கடித்து 12-வது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் இத்தாலியின் லாரன்சோ சொனாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.

இதனைடுத்து மற்ற 4-ஆவது சுற்று ஆட்டங்களில் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி, கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ், ரஷ்ய வீரர் கரென் கச்சனோவ் ஆகியோர் வெற்றிப்பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர்.