அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமானால் தமிழர்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்தவேண்டும்- கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்

0
228
Article Top Ad

இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பை தமிழர் பகுதிகள் வழங்கும் வரையில் அரசியல் தீர்வைப் பற்றி தென்பகுதி ஆட்சியாளர்கள் அக்கறை கொள்ளமாட்டார்கள் என அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் பிரதம ஆய்வாளர் கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் தெரிவிக்கின்றார்.

நாம் வெறுமனே செல்லாக்காசுகள் என்று எண்ணி பிச்கைக்காரர்களாக நோக்கப்பட்டால் எதற்காக ஆட்சியாளர்கள் அக்கறைகொள்ளவேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

குளோப் தமிழிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களைத் தெரிவித்தார்.