டெல்டா திரிபின் அறிகுறிகள் என்ன?

0
326
Article Top Ad

கொவிட்-19- கொரோனா வைரஸின் ஆபத்தான வடிவங்களில் ஒன்றானடெல்டா திரிபு முதன் முதலாக கடந்த ஒக்டோபர் 2020இல் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் உண்டான கொரோனா இரண்டாம் அலைக்கு எளிதில் பரவும் தன்மை உள்ள இந்தத் திரிபும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.

தலை சுற்றல், வறண்ட தொண்டை, தொடர் சளி போன்ற அறிகுறிகள் கொரோனா டெல்டா வகை திரிபு பாதிப்பை எதிர்கொள்பவர்களிடம் பொதுவாக காணப்படுகின்றன என்று பிரிட்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவுவதற்காக நடத்தப்படும் ஸோ கோவிட் ஆய்வு எனப்படும் லாபநோக்கமற்ற செயலியை நிறுவியுள்ள பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் இளம் வயதினருக்கு மோசமாக சளி இருந்தால் அதை டெல்டா திரிபு ஆக உணரலாம் என்று கூறியுள்ளார்.

அதே சமயம் பாதிக்கப்பட்ட நபர் தமது உடல்நிலை மோசமடைவதை உணராமல் போனாலும் அது அவரது நிலையை மோசமாக்கி ஆபத்தான நிலைக்கு தள்ளி விடும் என்று அவர் கூறுகிறார்.

எனவே தங்களுக்கு கொரோனா இருக்குமா என எவருக்கேனும் சந்தேகம் எழுந்தால்இ உடனடியாக அவர் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பேராசிரியர் டிம் தரும் அறிவுரை.

 

உலக சுகாதார நிறுவனம் கூறும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள்

coronavirus sympoms corona tamil nadu news

இங்கே உள்ள அறிகுறிகள் அல்லாமல் சிலநேரம் வயிற்றுப்போக்கு உண்டாவதும் (குறிப்பாக குழந்தைகளுக்கு) ஒரு கொரோனா அறிகுறியாகும்.

குழந்தைகளுக்கு கொரோனா வந்தால் என்ன அறிகுறி?
வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பகுதியில் தசை பிடிப்பு ஆகியவை குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்ததற்கான அறிகுறி என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இருமல் வந்தால் கொவிட்-19 அறிகுறியா?

பல வைரஸ் தொற்றுகளுக்கும் கொவிட்-19 தொற்று போன்றே அறிகுறிகள் இருக்கும். குறிப்பாக இந்த அறிகுறிகள் குளிர் காலத்தில் பரவலாக இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்று முக்கிய அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருக்கும் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் வேறு வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனாலும், பரிசோதனை செய்து அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

எப்போது மருத்துவமனைக்கு செல்லவேண்டும்?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் போதிய ஒய்வு மற்றும் பாராசெட்டமால் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டாலே குணமாகிவிடுவர்.

ஆனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முக்கிய காரணம் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுவதால்தான்.

 

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?

பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலை பரிசோதிக்கும் மருத்துவர்கள், அது அந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து பிராணவாயு சிகிச்சை அல்லது வெண்டிலேட்டர் சிகிச்சை எடுத்துக்கொள்ள பரிந்துரைப்பார்.

பிரிட்டனில் என்.ஹெச்.எஸ் 111 வலைத்தளம் இது தொடர்பான போதுமான தகவல்களை வெளியிட்டுள்ளது. மேலும் சுவாசப் பிரச்னை ஏற்படும்போது 999 என்ற மருத்துவ அவசர சிகிச்சை எண்ணை அழைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் என்ன நடக்கும்?

மிகவும் கடுமையாக உடல்நலன் பாதிக்கப்படுபவர்கள் அனுமதிக்கப்படும் மருத்துவமனை பிரிவே தீவிர சிகிச்சை பிரிவு.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிராணவாயு சிகிச்சை அளிக்கப்படும்.

மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்படும் பிராணவாயுவின் அளவு மற்றவர்களுக்கு வழங்கப்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபடும்.

கடுமையான பாதிப்பை சந்திந்தவர்களுக்கு வென்டிலேட்டர்கள் மூலம் அவர்களின் சுவாசப் பிரச்னை சரிசெய்ய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?

கொரோனா அறிகுறி தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோஇ விட்டிலேயே இருங்கள். குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

உங்கள் மாநில கொரோனா உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்களின் மாதிரிகளை சேகரிப்பர். இந்தியாவில் தற்போது 15 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் நீங்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவீர்கள்.

 

 

கொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி?

உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள் மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.

நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள்.

டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள் போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள்.

காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.

 

நன்றி – பிபிசி