புதிய அரசமைப்பு வரைபு இவ்வருட இறுதிக்குள்! – அநுரவின் கேள்விக்கு மஹிந்த பதில்

0
160
Article Top Ad

“இலங்கையில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு இந்த வருட இறுதிக்குள் இறுதி வரைவை சமர்ப்பிக்கும் என எதிர்பார்கின்றோம்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டங்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10) பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு தனது கொள்கை அறிக்கையில் உறுதியளித்தபடி புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு இவ்வருட இறுதிக்குள் தனது இறுதி வரைவைச் சமர்ப்பிக்கும்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன, பேராசிரியர் நசீமா கமர்தீன், கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியர் ஜி.எச்.பீரிஸ் அடங்குகின்றனர்” – என்றார்.