யாழில் தொடர்ந்தும் கரை ஒதுங்கும் உடல்கள்! – இதன் மர்மம்தான் என்ன?

0
152
Article Top Ad

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வல்வெட்டித்துறை, மணல்காடு பகுதிகளில் நேற்று இரு ஆண்களின் உடலங்கள் சிதைவடைந்த நிலையில் கரை ஒதுங்கிய நிலையில் இன்றும் ஆண் ஒருவரின் உடல் நெடுந்தீவில் கரை ஒதுங்கியுள்ளது.

மிகவும் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய இந்தச் சடலமும்  யாருடையது என்பது தொடர்பில் இன்றிரவு வரையில் அடையாளம் காணப்படாமையால் பெரும் சந்தேகம் நிலவுகின்றது.

இன்று கரை ஒதுங்கிய உடல் எந்தவொரு ஆடையும் இன்றியே கரை ஒதுங்கியுள்ளது.

இந்த உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வல்வெட்டித்துறை மற்றும் மணல்காடுப் பகுதிகளில் நேற்று கரை ஒதுங்கிய இரு உடல்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன