இந்து சமுத்திர மாநாட்டில் கோட்டா,ரணில்

0
145
Article Top Ad

இந்து சமுத்திர சம்மேளனத்தின் ஆரம்ப மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார் என்று அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்து சமுத்திர சம்மேளன மாநாடு ஐக்கிய அரசு இராஜ்ஜியத்தின் தலைநகரான அபுதாபியில் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 47 நாடுகள் பங்கேற்கும் இம்மாநாட்டில் ஆரம்ப உரையை நிகழ்த்துமாறு எமது ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் 4 ஆம் திகதி மாநாட்டில் உரையாற்றுவார்” – என்றார்.

இந்து சமுத்திர மாநாட்டுக்கு ரணிலுக்கும் வந்தது அழைப்பு! – டிசம்பர் 5ஆம் திகதி உரை

இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எம்.பிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

5ஆவது இந்து சமுத்திர மாநாடு எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை அபுதாபியில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கே ரணிலுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்கும் ரணில் விக்கிரமசிங்க டிசம்பர் 5 ஆம் திகதி உரையாற்றுவார்.

2016 – 2019 காலப்பகுதியில் குறித்த மாநாட்டின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.