யாழ்ப்பாணத்தில் இளைஞன் மீது வாள்வெட்டு

0
336
Article Top Ad

யாழ்ப்பாணம் – வடமராட்சி துன்னாலை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துன்னாலை மேற்கு பகுதியைச் சேர்ந்த 27 வயதான பாஸ்கரன் காண்டீபன் என்ற இளைஞன் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைகளில் வெட்டு காயங்களுக்கு இலக்கான குறித்த இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.