விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

0
168
Article Top Ad

நாட்டில் இரசாயன உர இறக்குமதி விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் சிறுபோகம் முதல் விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை முறையாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உர விநியோகத்துக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போது முதல் ஆரம்பிக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

உர விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, தற்போது மேற்கொள்ளப்படும் பெரும்போக நெற்செய்கையின் அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள், உரம் இன்மையால் நெற்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.