இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா – 2022க்கு பின்னர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

0
135
Article Top Ad

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 2022ம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா, விம்பிள்டன் இரட்டையர் முன்னால் சாம்பியனான இவர், 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் சானியா தோல்வியடைந்தார். இதன் பிறகு கூறிய சானியா மிர்சா, “இது எனது கடைசி சீசன் என்று நான் முடிவு செய்துள்ளேன். இந்த சீசனை தொடர முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை.” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

35 வயதான மிர்சா, 2005 ஆம் ஆண்டு WTA ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.