கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து

0
311
Article Top Ad

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.45 அளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து, பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன், இராணுவ தீயணைப்பு பிரிவினரும் களத்தில் இறங்கி மேலும் தீ பரவாத வகையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.