இலங்கையில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

0
280
Article Top Ad

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுவரும் மின்வெட்டு இன்றும் அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில், இன்று நண்பகல் அறிவிக்கப்படும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த அனல்மின் நிலையத்தில் இருக்கும் எரிபொருள், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இன்னும் சில மணித்தியாலங்களுக்கு போதுமானதாக இருக்கும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எரிபொருளை வழங்கினால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை 10 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை மின் உற்பத்திக்காக களனி திஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.