கோட்டா அரசின் இரகசியங்களை வெளியிட ஜயசுந்தர தீர்மானம்?

0
338
Article Top Ad

தனது பிரியாவிடை நிகழ்வில் நடந்த சில சம்பவங்கள் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி பிரதமர் உட்பட அமைச்சர்கள் வருவார்கள் என ஜயசுந்தர எதிர்பார்த்திருந்தார்.

எனினும் அவர்கள் எவரும் வரவில்லை என்ற காரணத்தால் அவர் அதிருப்தியில் இருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஓய்வுபெற்ற பின்னர் அமைதியாக ஓய்வு வாழ்க்கையை முன்னெடுக்க ஜயசுந்தர ஏற்கனவே எடுத்திருந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அவர் அவ்வப்போது ஊடகங்களுக்கு முன்னால் தோன்றி கடந்த கால இரகசியங்களை வெளியிடத்  தீர்மானித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.