பேராபத்தை நோக்கி இலங்கை – மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் உறுதி

0
317
Article Top Ad

இலங்கையில் 75 புதிய ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற 180 மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே இந்த 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.