அவுஸ்திரேலிய ஒபன் அரையிறுதியில் மெட்வடேவ், ஸிட்சிப்பாஸ், நடால் ,பெரட்டினி

0
84
Article Top Ad

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் காலிறுதிப்போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ்வை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடால், 6-3, 6-4, 4-6, 3-6, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றைய மூன்று காலிறுதிப் போட்டிகளில் முறையே இத்தாலிய வீரர் மாட்டியோ பெரட்டினி, கிரேக்க வீரர் ஸ்டெப்பானோஸ் ஸிற்சிப்பாஸ் மற்றும் ரஷ்ய வீரர் டானில் மெட்வடோப் ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தெரிவாகினர்.

முதலாவது அரையிறுதியில் ராபேல் நடால் இத்தாலிய வீரர் பெரட்டினியை எதிர்கொள்ளவுள்ள அதேவேளை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கிரேக்க

வீரர் ஸ்டேபானோஸ் ஸிற்சிப்பாஸ் ரஷ்ய வீரர் டானில் மெட்வடோவை எதிர்கொள்ளவுள்ளார். இந்தப்போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது