மிக மோசமான நிலையில் நடிகர் ரஜினிகாந் – காரணம் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து?

0
307
Article Top Ad

தனுஷ் – ஐஸ்வர்யா எடுத்துள்ள தீர்மானத்தால் நடிகர் ரஜினிகாந் என்ன நிலையில் இருக்கிறார் என்பது குறித்து சினிமா விமர்சகர் சுபாஷ் கே.ஜா கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந் காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தாங்கள் பிரிவதாக கடந்த 17 ஆம் திகதி இருவரும் சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.

தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு குடும்பத்தாரும் தீவிர முயற்சி செய்து வருகிறார்களாம். மகளையும் மருமகனையும் சேர்த்து வைக்க ரஜினி தான் கடுமையாக முயற்சிக்கின்றாராம்.

பிரபல சினிமா விமர்சகரான சுபாஷ் கே.ஜா கூறியதாக வெளியான செய்தியில்,

மகளின் விவாகரத்து செய்தி ரஜினிகாந்தை பெரிதும் பாதித்துவிட்டது. இந்த பிரிவு தற்காலிகமானது தான் என்று அவர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். கணவருடன் சமரசம் செய்துவிடுமாறு மகளை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்.

யார் கண்டது?. ரஜினி விரும்புவது நடக்கலாம். பிரச்சனையை மறந்து மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என்று இரு குடும்பத்தாரும் தனுஷையும் ஐஸ்வர்யாவையும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.